மட்டக்களப்பில் இயங்கும் மூன்று ரோட்டரி கழகங்கள் இணைந்து இந்திய ரோட்டரி கழக அனுசரணையில் 45மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது


 



















































இலங்கை   மாலைதீவு டிஸ்ட்ரிக்-  3220 ரோட்டரி கழகம் , இந்திய டிஸ்ட்ரிக் 2982.ரோட்டரி கழகம்  இணைந்து தெரிவு செய்யப்பட்ட  மட்டக்களப்பு மாவட்ட   45 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது  .

மட்டக்களப்பு மகாஜனகல்லூரி  கேட்போர் கூடத்தில்2025.05.17சனிக்கிழமை அன்று  இலங்கையின் மாவட்ட ஆளுநர் சுசேன  ரணதுங்க   ரணதுங்க , மாவட்ட செயலாளர் காமினி மத நாயக்க எதிர்கால மாவட்ட ஆளுநர் குமார் சுந்தர்ராஜ் மற்றும்  மாவட்ட பிரதி நிதிகள் ,கழக உறுப்பினர்கள்  நிகழ்வில் பங்கேற்றிருந்தார்கள் .
மட்டக்களப்பில் இயங்கும் மூன்று ரோட்டரி கழக தலைவர்களான   மட்டக்களப்பு ரோட்டரி கழக தலைவர் முரளிதரன் ,ரோட்டரி ஹெறிடேஜ்  கழக தலைவர் பாமதீசன் மற்றும் மட்டக்களப்பு சிட்டி  ரோட்டரி கழக தலைவர் ஜெயவண்ணன் ஆகியோர் இணைந்து  மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை  வழங்கி வைத்தனர்
இந்திய தமிழ் நாடு சேலம் டிஸ்ட்ரிக் 2982 ரோட்டரி கழகம் துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்பு செய்திருந்தது . வடக்கு கிழக்கு உட்பட வட மத்திய மாகாணங்களை சேர்ந்த பாடசாலை  மாணவர்களுக்கு 2௦௦௦  துவிச்சக்கரவண்டிகள்  விநியோகம் செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
அதில் முதல் கட்டமாக 45.துவிச்சக்கரவண்டிகள்    மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
45.துவிச்சக்கரவண்டிகளில்     15துவிச்சக்கரவண்டிகள் மண்முனை மேற்கு கல்வி வலய பாடசாலை  மாணவர்களுக்கு ஹெரிடேஜ் ரோட்டரி கழகம் விநியோகம் செய்தது ,  
  15துவிச்சக்கரவண்டிகளை   மட்டக்களப்பு ரோட்டரி கழகம் மைலம்பாவெளி பிரதேச பாடசாலை மாணவர்களுக்கும் ,  15துவிச்சக்கரவண்டிகளை சிடி ரோட்டரி கழகமும் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது
துவிச்சக்கரவண்டி விநியோக நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக  மாவட்ட ஆளுநர் சுசேன  ரணதுங்க  கலந்து சிறப்பித்தார்.
நிகழ்விற்கு பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் கழக அங்கத்தவர்கள் ,நலம் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள் .

FREELANCER