இலங்கை தமிழரசுக் கட்சியின் வாழைச்சேனை கிளையின் ஏற்பாட்டில் மே-18 முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.














இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகள் இடம்பெற்று வருகின்றன.

 இலங்கை தமிழரசுக் கட்சியின் வாழைச்சேனை கிளையின்  ஏற்பாட்டில்  மே-18  முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று வாழைச்சேனை பேருந்து தரிப்பிடத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் பூசைகள் நடாத்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு  பொதுமக்களுக்கு முள்ளி வாய்கால் உப்பிலாலாக் கஞ்சி  வழங்கப்பட்டது.

இன, மத பேதமின்றி வீதியால் சென்ற பொதுமக்கள் அதனை அருந்தினார்கள்.

இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், வாழைச்சேனை  பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களான வெ.பிறைசூடி, எஸ்.யோகநாதன் உட்பட சமுக செயற்பாட்டாளர்கள், கட்சி ஆதரவாளர்கள்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

கடந்த 2009.05.18 அன்று இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

 

  ந.குகதர்சன்