நுவரெலியா - கண்டி பிரதான வீதியின், கொத்மலை - கெரண்டி எல்ல பகுதியில்
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில்
விழுந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், 35 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.