19/05/2025 திங்கள்கிழமை பாலீஸ்வரப்பெருமானுக்கு 1008 சங்குகளாலும் , பாலாம்பிகை அம்பாளுக்கு 108 சங்குகளாலும் சங்காபிஷேக பெருவிழாவும் பால்குடப்பவனி நிகழ்வும் இடம் பெற உள்ளது , எனவே கிழக்கிலங்கை வாழ் சகல பக்த அடியார்களையும் ஆலய வருடாந்த சகஸ்ரநாம சங்காபிஷேக பெருவிழா மற்றும் பால்குடப்பவனியில் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரரின் அருளை பெற்றேகுமாறு ஆலய நிருவாக சபையினர் பணிவன்புடன் அழைக்கின்றனர் .
பால்குடப்பவனி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பிய அடியவர்கள் முன்கூட்டியே தங்கள் பெயர் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர் .