நாட்டின் சில இடங்களில் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை
பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்தவகையில், வமேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்,
காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய
மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை
மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை
பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.