இராஜாங்க அமைச்சர் அரச உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்!






(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் உயர் மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை (08)  இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம் பெற்றது.

மண்முனை தென் எருவில்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவினுள் உள்ள அரச காணியினை  முகாமைத்தும் செய்தல் தொடர்பாக கலந்துரையாடல் இடம் பெற்றது.

இதன் போது இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் :- இப்பிரதேசத்தின் பொதுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், இளைஞர்களின் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம், வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.