(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பில் ஐவா தாதியர் பாடசாலை மாணவர்களுக்கு பட்டமளித்துத் தொப்பி அணிவிக்கும் நிகழ்வு ஐவா நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் வசிம் மன்சூர் தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (08) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.
இதன் போது ஐவா தாதியர் பயிற்சிப் பாடசாலையில் கல்வி கற்று 102 தாதியர்களுக்கு பட்டமளித்து தொப்பி அணிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ். முரளீஸ்வரன், கூட்டுறவு வைத்தியசாலைப் பணிப்பாளர் லத்திப் , விரிவுரையாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.