மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் திருவருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் இசைபாமாலை இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது

.

 

 



















FREELANCER

 முன்னூறு  வருடங்களுக்கு மேல்  தொன்மை கொண்ட    மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான்   திருவருள்மிகு கண்ணகி அம்மன்  ஆலயத்தில்    இசைபாமாலை இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது .
முதலாவது பக்திரச காவிய  பாமாலையை  ஆரையம்பதி  கலைச்சுடர்  தேசியக்கலைஞர்  விஸ்வநாதன் பத்மஸ்ரீ   இயற்றி பாடிஇருந்தார்

 21.05.2024  மாலை ஆலய முன்றலில் இடம் பெற்ற இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில்  கண்ணகி அம்மன் ஆலயத்தின் வண்ணக்கர்மார்களான  S.சண்முகநாதன்,  த.கௌரி,  சி.சிவகுரு மற்றும் சிலர்   கௌரவிற்கப்பட்டார்கள்
மேலும்  ஆலய நிர்வாகத்தினருக்கும் , பிரதேச வாழ் பெரியவர்களுக்கும்  இசைபாமாலை இறுவெட்டு  வழங்கிவைக்கப்பட்டது.
அத்தோடு கொக்குவில்  பனிச்சையடி பத்திரகாளி,சத்துருக்கொண்டான் கொம்புச்சந்தி பிள்ளையார்  போன்ற ஆவய நிர்வாகத்தினருக்கும் இறுவெட்டு வழங்கி வைக்கப்பட்டது.