(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நிறைவடைந்தது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விளாவட்டவான் கிராமத்தில் ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய சடங்கு உற்சவம் கடந்த 23 ஆம் திகதி இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து சிறப்பான முறையில் இடம்பெற்ற அம்பாளின் சடங்கு உற்சவம் (26) ஞாயிற்றுக்கிழமை பள்ளயப்பூசை, ஆகாய பேச்சிக்கு மடைப்பூசை கொடுத்தல் மற்றும் கடல் குளித்தலுடன் நிறைவடைந்தது.
















