ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த நபர் கைது.

 


ஐரோப்பாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த நபர் படல்கம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தலங்காவ பகுதியை சேர்ந்த 29 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடத்தி, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி மேற்படி நபர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேகநபர், கனடாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பெண் ஒருவர் மற்றும் ஆண் ஒருவரிடமிருந்து இரண்டு லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள கடல்கம நகருக்கு வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.