காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 


 மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகநேரியில்  காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப் பெண் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.
வாகநேரியைச் சேர்ந்த 43 வயதான, 4 பிள்ளைகளின் தாயான அப்புசிங்கம் சாந்தினி என்பவரே உயிரிழந்தவராவர்.
இன்று அதிகாலை காலைக் கடன் கழிப்பதற்காக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றவரை பற்றைக்காட்டுக்குள்
மறைந்திருந்த யானை தாக்கியுள்ளது.
சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
கோறளைப்பற்று திடிர் மரண விசாரணை அதிகாரி வ.ரமேஸ் ஆனந்தன் மரண விசாரணைகளை
மேற்கொண்டார்.