மட்டக்களப்புகோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்.

 






கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று மாபெரும் இரத்ததான முகாமொன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு இரத்த வங்கியின் ஆதரவோடும் வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தின் நிதி அனுசரணையுடன் குறித்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக இன்று (31) திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் 54 குருதி கொடையாளர்கள் குருதியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.