(கல்லடி செய்தியாளர்)
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் எதிர்பாராமல் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி கோரி ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய, புளொட் அமைப்பின் கனடா கிளையினரும்,பிரித்தானிய கிளை உறுப்பினர் முகுந்தன் ஆகியோரின் 250000/ நிதியுதவியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக இன்று வியாழக்கிழமை (25) மாவடிவேம்பில் நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் ம.நிஸ்கானந்தராஜாவின் தலைமையில், கடசியின் சமுக மேம்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளர் ந.ராகவனால் தெரிவு செய்யப்பட்ட 237 குடும்பங்களுக்கு தலா ஐந்து கிலோ அரிசி வீதம் நிவாரணம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் சீ.சங்கரப்பிள்ளை,மாவடிவேம்பு கிராம சேவை உத்தியோகஸ்தர் இர்பான், கிராம அவிபிரித்தி சங்கத் தலைவர் க.விஜயராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.






.jpeg)

.jpeg)
.jpeg)





