ஜோர்தானில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்த 220 இலங்கையர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எனவே அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.





