கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு தாண்டவன் வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தின் 2024 ஆண்டு வருடாந்த திருவிழா 26.02.2024 நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது தொடர்ந்து நவநாட்கள் திருவிழா இடம்பெற்று இறுதித் திருவிழாவான கொடி இறக்க திருவிழா 04.02.2024 அன்று காலை இடம் பெற உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயம் தனது 400 வது ஆண்டு பெருவிழாவை இவ்வருடம் சிறப்பாக கொண்டா டுகின்றது. ஆலய பங்குத்தந்தை ஜூலியன் பிரான்சிஸ் தலைமையில் கொடியேற்ற திருவிழா இடம் பெற்றது.
ஆலயத்தின் 9 வட்டார கொடிகள் ஆலயத்திலிருந்து விசேட பூஜைகளின் பின்பு கொடியேற்ற இடத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆலய பங்குத் தந்தையினால் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதன் பின் ஆலயத்தின் வட்டார தலைவர்களினால் இவ்வாண்டுக்கான திருவிழா கொடிகள் ஏற்றி வைக்க ப்பட்டது. 400 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆலயம் சிறப்பாக அலங்கரி க்கப்பட்டு ஆலய மணியோசை முழங்க கொடியேற்ற திருவிழா சிறப்பாக இடம் பெற்றது. ஆலயத்தின் பெருவிழாவை முன்னிட்டு 02.02.2024 அன்று காலை ஆலயத்தின் 9 வட்டார 400 சிறுவர்களுக்கு ஞானஸ்தான நிகழ்வு இடம்பெற உள்ளது 03.02.2024 அன்று மாலை இவ் வருட திருவிழாவின் வட்டார சுற்று பிரகார ஊர்வலம் ஆலய பங்கு காரர்களால் முன்னெடுக்கப்பட உள்ளது


























