உலகளாவிய ரீதியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டில் மாத்திரம் 89 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நிர்வாக இயக்குனர் காடா வாலி இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களில் மிகவும் அதிகமாக பெண் கொலைகள் இடம்பெற்ற வருடமாக 2022 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.





