மோட்டார் போக்குவரத்து திணைக்களதினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


இலங்கையில் வாகனங்களை வாங்கும் போதும், விற்கும் போதும் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

ஒரு வாகனத்தை விற்கும் போது பெரும்பாலானோர் MTA 6 என்ற படிவத்தில் வாங்குபவரின் பெயர், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றை நிரப்பாமல் வெறுமனே விற்பனை கடிதத்துடன் வாகனத்தையும் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

அவ்வாறு விற்பனை செய்யும் போது வாங்குபவர் RMV (Registration of Motor Vehicles department) இல் அவரது பெயருக்கு அவ்வாகனத்தை பதிவு செய்யாமல் ஏதாவது ஒரு கொள்ளை சம்பவம் அல்லது வீதி விபத்தை ஏற்படுத்தினால், பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் என்றவகையில் நீங்கள் அப்பிரச்சினைக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.