மின்சாரம் தாக்கி குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

 


புஸ்ஸல்லாவ, மைப்பால பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மரக்கறி தோட்டம் ஒன்றை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக இழுக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 02 வயது 08 மாதமான குழந்தையும் 32 வயதுடைய ஆண் ஒருவருமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.