சம்பளத்தை 20,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி அரச ஊழியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

 



அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி அரச ஊழியர்கள்  (27) கொழும்பு செத்சிறிபாய முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை  முன்னெடுத்திருந்தனர்.

2024 ஜனவரி முதல் கொடுப்பனவுகள் அல்லது சம்பள உயர்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டும், 2016 முதல் இழந்த முழு ஓய்வூதிய உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும், விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் நிதியில் 8 சதவீத ஊதியக் கழிப்பை நிறுத்த வேண்டும் மற்றும் உடனடியாக தரத்தை அமல்படுத்த வேண்டும் என்பது போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாகும்.