(கல்லடி செய்தியாளர்)
அண்மையில் வெளியான தரம் - 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த தியாகசேகரம் மதுசிகா - (166), ரமேஸ்குமார் டிவீயானா - (154) ஆகிய மாணவிகள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை தேடித்தந்தனர்
வகுப்பு ஆசிரியை திருமதி தமேந்தி ஜெயானந்தன், வித்தியாலய அதிபர் கே.தவேந்திரகுமார் மற்றும் உதவி அதிபர் ஏ.அன்ரனி லீனஸ் அவர்களும் குறிப்பிட்ட மாணவிகள் பரீட்சையில் சித்தி அடைய வழிகாட்டியாக இருந்து ஊக்கப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது .








