2 ஆயிரத்து 519 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன வழங்கி வைக்கவுள்ளார்.

 


 

இலங்கையின் நோயாளர் பராமரிப்பு சேவையினை வலுப்படுத்தும் வகையில் 2 ஆயிரத்து 519 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன வழங்கி வைக்கவுள்ளார்.

2018 இல் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தாதியர் மாணவர் குழுவின் கீழ் 2020 ஜனவரியில் பயிற்சியை ஆரம்பித்து பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 2519 தாதியர்களுக்கு இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.