பொலிஸ் காவலில் வைத்து பணிப்பெண் ராஜன் ராஜகுமாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

 


வெலிக்கடையில் பொலிஸ் காவலில் வைத்து பணிப்பெண்  ராஜன் ராஜகுமாரி (வயது 42) உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

இலங்கையின் சிங்கள நாடக தயாரிப்பாளரின் வீட்டு பணிப்பெண் ராஜன் ராஜேஸ்வரி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில்  காவலில் இருந்தபோது உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பணிப்பெண், தனது வீட்டில் திருடப்பட்டதாக இலங்கை பெண் தொலைக்காட்சி தயாரிப்பாளர் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 2023 மே 11 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.