
14 வயதுடைய தனது மகளை பணத்துக்காக மற்றவர்களிடம் பாலுறவுக்காக விற்ற
தாயையும், பணம் கொடுத்து சிறுமியை வாங்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த
சந்தேகநபர்கள் தொடர்பான செய்தி இது.
தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு விற்ற குற்றச்சாட்டின் பேரில்
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட திவுலபிட்டிய வெலகான பிரதேசத்தைச் சேர்ந்த 43
வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறான செயலில் ஈடுபட்ட நபராவார்.
சிறுமி மற்றும் 2 ஆண் சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் பால்வினை நோய்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணை அறிக்கை கிடைக்கும்
வரை சிறுமியையை நீர்கொழும்பிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில்
அனுமதிக்குமாறு திவுலப்பிட்டி பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய சந்தேக
நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸ் மா அதிபர்
மேற்கொண்டு வருகிறார்.
சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால் நான்கு பிள்ளைகளின் தாயான சந்தேக
நபர் தனது வீட்டிற்கு ஆண்களை வரவழைத்து ஒவ்வொரு நபரிடமிருந்தும் 2,000 ரூபா
பெற்றுக்கொண்டு, மகளை அவர்களுடன் உடலுறவு கொள்ள வைத்துள்ளார்.
வீட்டில் வைத்தே மகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை பொலிஸாரின் விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் ஆட்களை அழைத்து வரும்
சந்தேகநபர், அந்த நபரையும் அவரது மகளையும் வீட்டுக்குள் வைத்து கதவுகளை
மூடி காவலுக்கு நிற்பதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார்
நீதிமன்றில் தெரிவித்தனர்.