இருந்த பணத்தை யாசகரிடம் கொடுத்து விட்டு , பயணிக்க பணம் இல்லாமல் முடியாமல் திண்டாடிய பெண் .

 


நடுத்தர வயதுடைய அந்தப் பெண், தன்னுடைய மகளின் வீட்டுக்குச் செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளார். என்ன சிந்தனையில் இருந்தாரோ தெரியவில்லை. தான் வைத்திருந்த 50 ரூபாய் பணத்தை, நடத்துனர் என நினைத்து யாசகரிடம் கொடுத்துவிட்டார்.

 தன்னுடைய பணப்பையில் 50 ரூபாயை மட்டுமே வைத்திருந்துள்ளார்.

யாசகர் இறங்கியவுடன் பஸ்ஸில் ஏறிய நடத்துனர், பயணத்துக்கான பணத்தை கேட்டபோதுதான்,   இருந்த பணத்தை ஏற்கெனவே  கொடுத்தமை ஞாபகத்துக்கு வந்தது. அதுதொடர்பில் நடத்துனருடன் அப்பெண் முரண்பட்டுள்ளார்.

எனினும், அப்பெண்ணுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த பயணியே, நிலைமையை தெளிவுப்படுத்தியுள்ளார்.

புரிந்துகொண்ட அப்பெண், ஏனைய பயணிகளிடம் உதவிக்கேட்டு பயணச்சீட்டுக்கான கட்டணத்தை செலுத்தி பயணித்துள்ளார்.