வயல் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

 


கிளிநொச்சி – பளை கோவில் வயல் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுத்துப்பாக்கியை குறித்த பகுதியில் வைத்த நபர் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.