ஜிம்பாப்வேயில் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



 

ஜிம்பாப்வேயில் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கழகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உலகின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கழக வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் ரசிகர்கள் கவலையடைந்தனர். செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் நெதர்லாந்திற்கு எதிராக ஜிம்பாப்வே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மைதானத்தின் தெற்கு முனையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. மேலும் 3 இற்கும் அதிகமான குரூப் போட்டிகள், சூப்பர் சிக்ஸ் போட்டிகள் மற்றும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டிக்கு இந்த மைதானம் பயன்படுத்தப்படுமா? என ஆய்வுக்குப் பிறகு தான் தெரிய வரும்.