களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய மகோற்சவம் ஆரம்பம்!
























களுவாஞ்சிகுடி நிருபர்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும்,  சுயம்புலிங்கப்பிள்ளையார் என்ற பெருமையினையும் கொண்டதுமான மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய
வருடாந்த அலங்கார மகோற்சவம் 16  இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இலங்கையில் மிகவும் பண்டைய ஆலயங்களுள் ஒன்றென்ற பெருமையினைக் கொண்ட களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார திருவிழா
பத்து தினங்கள் நடைபெறவுள்ளது.

16 மாலை கிரியைகளுடன் ஆரம்பமாகி,  கும்பபூஜை,யாகபூஜை நடைபெற்று சுயம்புலிங்கப்பிள்ளையாருக்கு விசேட அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சுயம்புலிங்கப்பிள்ளையார், சிவன், முருகப் பெருமான் ஆகியோருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன்,  உள்வீதி மற்றும் வெளிவீதியுலாவும்  நடைபெற்றது.

இந்நிலையில் எதிர்வரும்  திங்கட்கிழமை (26) நண்பகல் 12.00 மணிக்கு ஆலயத்தின் சிறப்புமிக்க ஆனி உத்தர தீர்த்தோற்சவம்  நடைபெறவுள்ளது.