சுகாதாரத் துறையில் எதிர்கால வேலைத்திட்டத்தை வலுப்படுத்த சுகாதார மாநாடு!





















-கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கேற்பு-

சுகாதாரத் துறையில் எதிர்கால வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண சுகாதார மாநாடு நேற்று (06) பிற்பகல் நாரஹேன்பிட்டியில்  உள்ள தேசிய இரத்த மாற்று நிலையத்தின் கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தலைமையில் நடைபெற்றது.


இதன் போது சுகாதார துறையில் காணப்படும் குறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.


மேலும் இம்மாநாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாணத்தில் சுகாதார துறையில் காணப்படும் பிரச்சினைகள்,மருந்துப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை துரிதகதியில் நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தியதோடு, அதற்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.