அடுத்த மாதம் முதல் லொத்தர் சீட்டின் விலையை 40 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால்
லொத்தர் விநியோகஸ்தர்களின் கொமிஷனை அதிகரிப்பதற்கு இணங்கவில்லை என அகில
இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதேவேளை கமிஷன் தொகையை அதிகரிக்காவிட்டால் ஜூலை 7ம் திகதி முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகுவதாக அதன் தலைமைச் செயலாளர் பி. எஸ். எஸ்.மாரசிங்க தெரிவித்துள்ளார்.