அகதிகள் படகு கவிழ்ந்ததில் கிரீஸ் கடல் பரப்பில்300பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 


கிரீஸ் கடற்கரைப் பகுதியில் புலம்பெயர் பயணிகள் பயணித்த படகு ஜூன் 14 ஆம் திகதியன்று கவிழ்ந்ததில் 300 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  பாகிஸ்தான் செனட் தலைவர் முஹம்மது சாதிக் சஞ்சரானி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக ஐரோப்பாவை அடைய முயன்ற ஏறக்குறைய 750 பேரை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு நீரில்மூழ்கியுள்ளது.