மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் சிவமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்-2023














(கல்லடி செய்தியாளர்)


கல்லடி புதுமுகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் நாளை திங்கட்கிழமை (26) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 03 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் ஆலய உற்சவம் நிறைவு பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

இதன்போது 29 ஆம் திகதி வியாழக்கிழமை தவநிலைச் சடங்கும், 30 ஆம் திகதி திருக்கல்யாணக்கால் வெட்டல் சடங்கும், 02 ஆம் திகதி அதிகாலை தீமிதிப்பும் இடம்பெறவுள்ளன.

ஆலய உற்சவக் கிரியைகள் யாவும் பிரதம பூசகர்களான க.சித்திரவேல் மற்றும் சி.ஜோதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் உற்சவ காலப் பூசகர்களான வ.சசிகுமார், க.கிசாந்தன், ஐ.பிரதீஸ்கரன், ந.யோகராசா மற்றும் ந.புனிதராஜ் ஆகியோர் இணைந்து நிகழ்த்தவுள்ளனர்.