வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெறுவதில் பிரச்சினை இருந்தால் 1962 என்ற அவரச தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்


 

 ஒன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக 3,265 விண்ணப்பங்கள் அதன் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 15ம் திகதி முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக ஒன்லைன் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒன்லைன் அமைப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு திணைக்களத்தின்​ 1962 என்ற அவரச தொலைபேசிக்கு இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை பெறலாம் என தொிவிக்கப்பட்டுள்ளது.