‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!!


இதேவேளை, புத்த ரஷ்மி வெசாக் வலயத்தை பார்வையிட வந்திருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் களனி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் பர்கி, முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.