மலசல கூட குழியில் விழுந்து ஏழு வயது சிறுவன் உயிரிழப்பு .


 

 

ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் லிதிஸ் எனும் சிறுவனே இவ்வாறுமரணமடைந்துள்ளார்.

குடிநீர் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் குறித்தபகுதியில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்டு பாவிக்கப்படாத குழியில் நிரம்பிய நீரை அவ்வப்போது சிலதேவைகளுக்காக அக்குடும்பம் பயன்படுத்தியுள்ளது. இதனை அவதானித்துள்ள அந்த சிறுவனும் அக்குழியில் யாரும் அவதானிக்கநேரத்தில் நீரைஅள்ள முயற்சித்துள்ளதாகவும் இதன் காரணமாகவே அச்சிறுவன் குழியில் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சிறுவனைகாணவில்லை என தேடியதாய் உள்ளிட்ட உறவினர்கள் இறுதியில் குழியில் அவதானித்த போதே அங்கிருந்துசிறுவன் மீட்க்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளான். ஆயினும் அச்சிறுவனின் உயிர் பிரிந்துள்ளது.

இதேநேரம் அச்சிறுவனின் தாய்க்கு இரண்டாவது பிள்ளை பிறந்து ஒருவாரமாகிய நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

மரணமடைந்த சிறுவனின் உடல் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் பிரேதஅறையில் உடற்கூற்றாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் அக்கரைப்பற்றுபொலிசாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.