மட்டக்களப்பு ஆரையம்பதி H & D தாதியர் பாடசாலையின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் ஆரையம்பதியில் நடைபெற்றது










































SHIVA MURUGAN 


 மட்டக்களப்பு  போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆரையம்பதி H&D-தாதியர் பாடசாலை ஏற்பாட்டில்  2022.11.21-ம் திகதி அன்று திங்கட்கிழமை  காலை 8.00- மணி முதல் 2.00- மணி  வரை ஆரையம்பதி H&D-தாதியர் பாடசாலையில்   இரத்த தான முகாம் நடை பெற்றது .


இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் கீத்திகா மதனழகன் ,இரத்த வங்கி பிரிவு பொறுப்பதிகாரி டி .ஜெயராஜ் , பொதுசுகாதார பரிசோதகர் பி.எம்.எம்.பைசல் , பொதுசுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் ஆர் அனுபிரதாப்,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், எச்.என்ட.டி தாதிய பாடசாலை மாணவர்கள் ,இளைஞர் ,யுவதிகள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


இரத்த கொடையாளிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.