தென் இந்தியாவை அதிரவைத்த வாகன விபத்து .

 


புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல நாவலே பாலத்தில் ஏற்பட்ட விபத்து தென்னிந்தியாவை உலுக்கியுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 48 வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், விபத்தால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானபடி ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

ஞாயிறு (நவம்பர் 20) அன்று நடந்த இந்த விபத்தை அடுத்து, தற்போது சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த மீட்பு படையினரின் அணிகளால், முழுவீச்சில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.