நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை.

 


நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று உறுதியளித்துள்ள லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ், டிசெம்பர் 1ஆம் திகதி முதல் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், உள்நாட்டு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார்.

 ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

டிசெம்பர் மாதத்துக்கு 34,000 மெற்றிக் தொன் எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டதாகவும், வரும் நாட்களில் 3,000  மற்றும் 4,000 மெற்றிக் தொன் கப்பல்கள் கொழும்பை வந்தடையும் என்றும் சுட்டிக்காட்டினார்.