மட்டு புதூரில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் 20 போத்தல் கசிப்புடன் கைது!!

 






(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு  தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள  புதூர் பிரதேசத்தில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு பெண் ஒருவரை 20 போத்தல் கசிப்புடன் நேற்று திங்கட்கிழமை மாலை (28) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட பலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான நேற்று மாலை கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அங்கு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் 20 போத்தல் கசிப்பை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.