முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அதிகரிக்கப்படுமென, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
தற்போது முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் 5 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஒதுக்கீடு தமக்கு போதாதென, முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் கடந்த வாரம் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் மகஜரொன்றை கையளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





