ரியாத் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம்
மீதான தாக்குதல் மற்றும் அமெரிக்கப் படைவீரர்களின் உயிரிழப்புகளுக்கு
அமெரிக்கா "விரைவில்" பதிலடி கொடுக்கும் என்று கேபிள் நெட்வொர்க் நிறுவனமான
நியூஸ்நேஷனிடம் (NewsNation) ட்ரம்ப் தெரிவித்தார்.
இதுவரை ஆறு படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என்று நேற்று இரவு அமெரிக்கா தெரிவித்துள்ளது.
"தரைப்படை வீரர்களை நேரடியாகக்
களமிறக்குவது (Boots on the ground) அவசியமாக இருக்காது என்று அவர்
என்னிடம் தெரிவித்தார்," என்று நியூஸ்நேஷனின் அரசியல் செய்தியாளர் ஒருவர்
அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.





