இன்று (28.02.2026)காலை பொலன்னறுவை ரோயல் கல்லூரிக்கு முன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் பிறிதொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது வேகக் கட்டுப்பாடின்றி பயணித்த ஒரு மோட்டார் சைக்கில் அருகிலிருந்த மரத்தில் மோதி எதிர் திசையிலிருந்து வந்த மற்றைய மோட்டார் சைக்கிள் மீது மோதியே இக் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பாதையில் வாகனம் செலுத்தும் போது வேகமாக செலுத்துவதை தவிர்த்து கட்டுப்படுத்தக் கூடிய வேகத்துடன் விவேகமாக வாகனங்களை செலுத்தினால் இது போன்ற விபத்துக்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.





