அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளரும் மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவருமான அஷ்ஷெய்க் எப்.எம்.எஸ்.ஏ. அன்ஸார் மௌலானா, கடந்த டிசம்பர் மாதம் 31ம் திகதி கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை முன்னிட்டு இறுதியாக விரிவுரையாளராக கடமை ஆற்றிய மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியில் (16) மகத்தான கௌரவம் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி த. கணேசரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அஷ்செய்க் எப்.எம்.எஸ். அஹமது அன்ஸார் மௌலானா அவர்களின் கல்வித் துறை, சமூக சேவைகள் பற்றி விரிவுரையாளர்கள் இங்கு உரையாற்றியதுடன் பயிலுனமாணவர்களும் பல்வேறு நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தனர்.





