கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை (NCM) சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய கல்வித் தொகுதிகளிலும் தீர்க்கப்படாத பல சிக்கல்கள் குறித்து எதிர்க்கட்சிக்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தாமதப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி மேற்கண்ட விடயம் கூறப்பட்டுள்ளது.





