தரம் 6 ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க தேசிய கல்வி நிறுவகம் (NIE) ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
கல்வித் தரத்தைப் பாதுகாக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் இந்த மறுசீரமைப்புப் பணியை முன்னெடுத்துள்ளது.
இதன் மூலம் கல்வி முறையில் காணப்பட்ட ஒரு பெரிய குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.





