காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திய இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் இன்று 18 ம் திகதி கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத்து தாக்குதலில்( 25) வயதுடைய ஹைராத் நகரிலுள்ள அஸி அஸ்பாக என்ற இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி 06 அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் சம்பவ தினமான இன்று காலையில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென உள் நுழைந்த இளைஞன் ஒருவர் குறித்த இளைஞர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய உள்ளார்
இதனையடுத்து படுகாயமடைந்தவர் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
சம்பவம் மேலும் தெரிய வருகையில்
கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனுக்கும் கத்தியால் குத்திய இளைஞனுக்கும் இடையே ஒரு சில நாட்களாக கை கலப்பு வாய்த்தர்க்கம் இடம் பெற்று வந்த நிலையிலேயே இன்று கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மற்றுமொரு கத்திக்குத்துச் சம்பவம்
.jpg)







