கடந்த 03ம் திகதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை சிறப்பிக்கும் முகமாக கோறளைப்பற்று வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகள் அல்ல உலகை மாற்றும் திறனாளிகள் எனும் கருப்பொருளில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விசேட நிகழ்வு இன்றைய தினம் பேத்தாளை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வாழைச்சேனை பிரதேசசெயலக நிருவாக உத்தியோகத்தர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு திறமைகள் கலை வடிவங்களாக வெளிப்படுத்தப்பட்டதுடன், நடனங்கள், பொலித்தீன் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம், கவிதை, பாடல் என பல்வேறு அம்சங்களும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.
அத்துடன் மாற்றுத் திறனாளிகளாக இருந்து பல்வேறு சேவைகளில் பெருமை சேர்த்தவர்களுக்கான கௌரவிப்புகளும், கல்வி ரீதியான போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய சிறார்களுக்கான பாராட்டுதல்களும், கலைநிகழ்வுகளை வழங்கியவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.jpeg)
.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)




