வறுமை ஒழிப்பு "பிரஜாசக்தி" தேசிய இயக்க வேலைத்திட்டத்தில் சமூக சபை தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு.

 


















மண்முனைப்பற்று பிரதேச செயலக  கிராம மட்ட  சமூக அபிவிருத்திசபை  உறுப்பினர்களுக்கு வறுமை ஒழிப்பு "பிரஜாசக்தி" தேசிய இயக்கத்தினை செயற்படுத்துவதற்கான  கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல் விழிப்புணர்வு செயலமர்வானது மண்முனைப்பற்று பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் 19/12/2025 அன்று  பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு அ.சுதர்சன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் திரு வெ. ரமேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசசெயலக பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து கிராமங்களுக்குமான  சமுக அபிவிருத்தி சபைக்கான உறுப்பினர்கள்  பங்கேற்று பூரண தெளிவினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.