இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தடைப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்











 திருமலை கொழும்பு மட்டக்களப்புக்கான புகையிரத சேவைகளை இன்று தொடக்கம் மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது

 இதேவேளை  அரசாங்கத்தின் துரித முயற்சியினால் ரீ பில்ட் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக சேதமடைந்த புகையிரத பாதைகள் திருத்த பணிகள் யாவும் நிறைவடைந்ததன் பின்பு கடந்த சில நாட்களாக பரீட்சாத்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டு  வந்ததை அடுத்து இன்று அதிகாலை 5  மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கான உதய தேவி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

 இன்று காலை திருகோணமலையிலிருந்து கொழும்பிற்கான சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பில் இருந்து செல்லும்  பயணிகள் கல் ஓயா சந்தியில் இறங்கி திருமலையில் இருந்து வரும் கொழும்பு காண புகையிரதத்தில் மாற வேண்டும்

 இதேவேளை மா கோவில் இருந்து மட்டக்களப்புக்கான சரக்கு மற்றும் எரிபொருள் சேவைகளும் இன்று தொடக்கம் மீண்டும் முன்னெடுக்கப்பட உள்ளது.

  வரதன்