சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் அரசாங்கம் குறைக்க வேண்டும் .

 


சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். 

குறைந்த எஞ்சின் கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

நாட்டில் அண்மையில் நிலவிய இயற்கை அனர்த்தங்களுக்கு பின்னர் வாகன கொள்வனவு வீதம் சடுதியாக குறைவடைந்துள்ளது.  வாகன இறக்குமதிக்காக முன்பதிவுகள் செய்தவர்கள் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே அவர்கள் பதிவுகளை இரத்துச் செய்துள்ளார்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை குறித்த காலப்பகுதிக்குள் விடுவிக்காவிடின் காலமாதம் என்று குறிப்பிட்டு 3 சதவீதமளவில் வரி அறவிடப்படுகிறது. தற்போதைய இக்கட்டான நிலையில் இந்த வரி அறவிடலை இரத்துச் செய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.

நடுத்தர மக்களின் மோட்டார் வாகன கொள்வனவு கனவு பாதிக்கப்பட்டுள்ளது. வெகனார் ரக வாகனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள வரி 40 இலட்சம் ரூபா வரையில் காணப்படுகிறது. ஆகவே இந்த வரிகளை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.