நாட்டில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை இன்று முதல் மீண்டும் திறக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

 



அனர்த்த நிலைமையில் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரச மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் தொழில் நிபுணர்களின் குழந்தைகளுக்குப் பராமரிப்பு வழங்குவதற்காக, இன்று முதல் பாதுகாப்பான சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்குமாறு அனைத்து சிறுவர் பராமரிப்பு நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.